தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள்; ஊடகவியலாளர் மகாநாடு!
தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின் தொடர்பாடலுக்கான பயிற்சி மையம் ( CCT) ஏற்பாடு செய்யப்பட்ட நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் டி ரஜினிகாந்த் தலைமையில் இன்றைய தினம் ஹட்டன் லா அடம்ஸ் விருந்தக மண்டபத்தில் ஊடகவியலாளர் மகாநாடு இடம்பெற்றது.
இதில் அண்மையில் அனர்த்தத்தை ஏற்படுத்திய டிட்வா அனர்த்தத்தின் பின் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கான சேவைகள் தொடர்பான பாரபட்சம் மற்றும் வளப்பகிர்வில் உள்ள பாதிப்புக்கள் தொடர்பாகவும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தொடர்பாகவும் மேலும் மலையக மக்களின் வீட்டு உரிமை, காணி உரிமை, தொடர்பாகவும் பெருந்தோட்டத்துறையில் லயன் அறைக்ளுக்கு பதிலாக பாமடி வீட்டுத்திட்டம் பொறுத்தமற்றது என்றும்.
மலையக பெருந்தோட்ட பெண்கள் எதிர்நோக்கும் சவால்களும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் முன்னாள் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் மதிப்புக்குரிய திருவாளர் சந்திரபோஸ் அவர்களும் மனித உரிமைகள் நிலையத்தின் அட்டன் பிராந்திய முகாமையாளரும் சமூக சிற்பி நிறுவனத்தின் உடைய தலைவருமான திருவாளர் ஜெயராஜ் அவர்களும்.
SWM நிறுவனத்தின் தலைவர் திருமதி சந்திரமதி அவர்களும். சுய சக்தி நிறுவன இணைப்பாளர் திருவாளர் செல்வராஜ் அவர்களும் அரசியல் செயல்பாட்டாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திருவாளர் சுரேஷ் குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
