திருகோணமலையில் இன்றுமாலை பாரிய விபத்து : பலர் படுகாயம்!
திருகோணமலை -கிண்ணியா காவல்துறை பிரிவிலுள்ள கங்கை பாலத்தருகில் வைத்து மரமொன்றுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை ஏப்ரல் 22 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாதையைவிட்டு விலகி மரமொன்றுடன் மோதியதிலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த விபத்து சம்பவத்தால் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.மரத்துடன் தாழ் நிலப் பகுதியில் மோதுண்ட பேருந்தை டிப்பர் வாகனம் ஊடாக மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.