உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

காவத்தை அராஜகம்; கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
39 பார்வைகள்

நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற அராஜக சம்பவத்திற்கு எதிராகப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் களமிறங்கியுள்ளார்.

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய ‘கறுப்பு ஆடை கும்பலுக்கு’ எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதி அமைச்சர், சட்டத்தைக் கையிலெடுத்துப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாகக் காவத்தை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதானியைத் தொடர்பு கொண்ட பிரதி அமைச்சர் பிரதீப்,தோட்டப் பகுதிக்குள் எதற்காக இவ்வாறான ஒரு கறுப்பு ஆடை கும்பல் (குண்டர் படை) உருவாக்கப்பட்டது? இந்த அராஜகச் செயலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளதுடன் என்பது குறித்து அவர் விளக்கம் கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்ட தமிழ் தொழிலாளர்களுக்குச் சாதகமாகப் பிரதி அமைச்சர் வீடுகளை இழந்த மற்றும் தாக்குதலுக்கு உள்ளான மக்களுக்குத் தோட்ட நிர்வாகம் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்
அவ்வாறு இல்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே இடத்தில் காணி வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்களை முன்வைத்துள்ளார்.

மலையகத் தோட்டப் பகுதிகளில் நிர்வாகங்கள் குண்டர் படைகளை வைத்துக்கொண்டு தொழிலாளர்களை அச்சுறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

68 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0