• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

குமார ஜயக்கொடி ஊழல் செய்யவில்லை; விசாரணைக்காகவே அவர் பதவி விலகல்.!

Mathavi by Mathavi
April 18, 2026
in இலங்கை செய்திகள்
0
குமார ஜயக்கொடி ஊழல் செய்யவில்லை; விசாரணைக்காகவே அவர் பதவி விலகல்.!
Share on FacebookShare on Twitter

“தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியில் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி ஊழல் செய்தார் என்று எந்தவொரு விசாரணையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் குமார ஜயக்கொடி ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரச கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை நிராகரித்துள்ளது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழு நடத்திய ஆய்வுகளிலும் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வலுசக்தி அமைச்சுப் பதவியை வகித்திருந்த குமார ஜயக்கொடி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது கூட, அவர் ஊழல் புரிந்தார் என்று ஆதாரபூர்வமான கருத்துக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் வெளிப்படையான மற்றும் துரிதமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக, அவர் தனது வலுசக்தி அமைச்சர் பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து விலகியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஆராய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணைகளுக்கும், இந்த விசேட ஆணைக்குழுவின் பணிகளுக்கும் இடையே எந்தவித முரண்பாடுகளும் ஏற்படாது.” – என்றார்.

நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால், அவற்றை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது அழைப்பு விடுத்தார்.

அமைச்சராக இருந்த ஒருவர், தன் மீதான விசாரணைகள் நேர்மையாக நடப்பதற்காகப் பதவியைத் துறந்திருப்பது பாராட்டுக்குரியது என்று தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், உண்மை நிலை விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Related Posts

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

by Mathavi
July 10, 2026
0

மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபையினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின்...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

by Mathavi
July 10, 2026
0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் சபையின் தவிசாளர் சுரேன் தலைமையில் ஆரம்பமாகியது. கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் மறைந்தவர்களுக்காக சிறிது நேர மௌன...

நூதனமான முறையில் போதைப்பொருள் கடத்தல்; யாழில் ஒருவர் கைது.!

நூதனமான முறையில் போதைப்பொருள் கடத்தல்; யாழில் ஒருவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (9)...

முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக.!

முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக.!

by Mathavi
July 10, 2026
0

தற்போது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...

யாழில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது.!

யாழில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களுடன் யாழ்ப்பாணத்தின்...

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகரசபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டின் கீழ் காத்தான்குடி பொலிஸாரால்...

மட்டக்களப்பில் தற்காலிக பாலம் திறந்து வைப்பு.!

மட்டக்களப்பில் தற்காலிக பாலம் திறந்து வைப்பு.!

by Mathavi
July 10, 2026
0

மட்டக்களப்பு நகருக்குள் வரும் பிரதான பாலங்களில் ஒன்றாகவும் அண்மையில் இடிந்து வீழ்ந்த பாலமாகவும் உள்ள புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அண்மையில் இந்த...

வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகள்; வீதி திருத்தப் பணியாளர்கள் கடும் அவதி.!

வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகள்; வீதி திருத்தப் பணியாளர்கள் கடும் அவதி.!

by Mathavi
July 10, 2026
0

தொண்டமானாறு - அச்சுவேலி வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் வீசும் கழிவுகளால் தாம் பெரும் அசௌகரியங்களை...

கதிர்காம பாதயாத்திரை; பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை திறப்பு.!

கதிர்காம பாதயாத்திரை; பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை திறப்பு.!

by Mathavi
July 10, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவை முன்னிட்டு, பாதயாத்திரையில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பயன்பாட்டிற்காக உகந்தை வழியூடான காட்டுப் பாதை இன்று...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
July 10, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை - 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை - 5...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி