சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது.!
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்னொருவ பகுதியில் நேற்று புதன்கிழமை(15) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடா ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 101 லீற்றர் 250 மில்லிலீற்றர் (135 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1,110 லீற்றர் கோடா (06 பீப்பாய்கள்) என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மொரகஹஹேன பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.