உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது, 2017ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று ஏப்ரல் 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்:

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல அது 2017 முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த ஒரு சதி , சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையனுக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னரே தெரிந்திருந்தது என்ற உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

சஹாரன் ஹாஷிமை மேலிடத்திலிருந்து இயக்கிய ஒரு நபர் மற்றும் ஒரு குழு இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் கொ*லை தொடர்பான விசாரணை முறையாக நடத்தப்பட்டிருந்தால்,
ஈஸ்டர் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும்.


சதித்திட்டம் தீட்டியது மற்றும் ஈஸ்டர் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தது ஆகிய இரண்டு விடங்களில் சந்தேகத்தின் பேரில் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முதலாவது சாட்சியாக சுரேஷ் சாலே பெயரிடப்பட்டுள்ளார். தாக்குதல் இடம்பெற்றபோது நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியில் இருந்தது. ரணில் மைத்திரி கூட்டணியில் கலாச்சார அமைச்சராக சஜித் பதவி வகித்திருந்தார். ஆரம்பத்தில் பொலிசாரை கொலை செய்தவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் என கூறப்பட்டது. அது முற்றிலும் தவறான தகவல்.

சஹ்ரானின் குழுவினரால் இந்த பொலிசார் கொலை செய்யப்பட்டுள்ளது. வவுணதீவு கொலையின் பிரதான நபரை அன்று கைது செய்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றிருக்காது. 30.11.2018 அன்று வவுனதீவு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டது, 22 மற்றும் 23.12.2017 அன்று மாவனெல்லாவில் உள்ள புத்தர் சிலைகள் மீதான தாக்குதல்.


16.01.2019 அன்று வனத்தவில்லுவவில் உள்ள ஒரு ரகசிய முகாமில் வெடிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டது. 10.03.2019 அன்று மாவனெல்லா பகுதியில் தஸ்லீம் என்ற நபர் சுடப்பட்டது 16.04.2019 அன்று மாவனெல்லா பகுதியில் தஸ்லீம் என்ற நபர் சுடப்பட்டது. 21.04.2019 அன்று பாலமுன பகுதியில் மோட்டார் சைக்கிள் வெடித்தது ஒரு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலாகும். இதிலிருந்து தெளிவாகிறது.

விசாரணையும் புலனாய்வுத் துறையும், இது ஒரே குழுவால் ஒன்றோடொன்று தொடர்புடைய தொடர் நிகழ்வுகள் என்று கூறுகின்றன. நல்லாட்சி காலத்தில் இருந்தவர்கள் உரிய முறையில் விசாரணை செய்திருந்தால்
இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்க முடியும். ஆனால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட இரண்டு விடுதலைப் பு*லிகள் மீதே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது விசாணைகளை தடுப்பதற்காக மேற்கொள்ப்பட்ட சதியாகவே அமைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 26ஆம் திகதி சரிப் ஆலந்தெபே, ஹவுர்;மாமா என்பவர்கள் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் அன்றையதினமே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது எமது அரசாங்கத்தின் கீழ் தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

2 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

24 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0