மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழா.!
மஸ்கெலியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டு விழா நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்வு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார தலைமையில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று 08.04.2026 அன்று இடம்பெற்றது.
நிகழ்வில் மவுஸ்சாகலை சந்தியில் இருந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் வரை 04 கிலோ மீட்டர் தூரம் மரதன் ஓட்ட போட்டி, சட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த 2026 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.




