உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மத்திய கிழக்கு போரைச் சாட்டி மக்களை ஏமாற்றவே வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

“மின்சாரக் கட்டணத்தைச் சடுதியாக அதிகரித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களைச் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதுல்கோட்டையிலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் 6.7 மில்லியன் மின் நுகர்வோரில் சுமார் 5.2 மில்லியன் பேர் இந்த மின்கட்டண அதிகரிப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்னர் மின்சார சபையின் ஊழல்களைத் தடுத்து, கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாக உறுதியளித்த அரசாங்கம், இன்று அதற்கு மாறாக 40 வீதத்தால் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இது நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் மீது சுமத்தப்பட்ட பாரிய பொருளாதாரப் பாதிப்பாகும்.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் மின்கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டதாக அரசாங்கம் கூறும் காரணத்தை நாம் நிராகரிக்கின்றோம். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தரமற்ற நிலக்கரியைக் கொண்டு வந்தமையே இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணமாகும். இதனால் 150 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்புக்கு இழக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட அதிக விலைக்கு டீசல் மூலம் மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் நட்டத்தையே தற்போது மக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ளது.

உலகளாவிய நெருக்கடிகளின் போது ஏனைய நாடுகள் மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குகின்றன. ஆனால், இலங்கை அரசாங்கம் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 115 ரூபாவையும், டீசலுக்கு 91 ரூபாவையும் வரியாக அறவிடுகின்றது. எரிபொருள் விலையில் மூன்றில் ஒரு பகுதியை வரியாகப் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக அந்த வரிகளைக் குறைக்க அரசாங்கம் மறுத்து வருகின்றது.

அரசாங்கம் குறுகிய காலத்தில் 1.4 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ள போதிலும், அதனால் மக்களுக்கோ அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கோ எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் இந்த இயலாமை காரணமாக 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் நாடு இன்னும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்.” – என்று திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

56 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

47 0 0