ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்.!
ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரும் தூதுக்குழுவினராக வருகை தந்துள்ளனர். இவர்கள் இன்று மாலை 04.20 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து ஏ.ஐ.-281 எனும் ஏர் இந்தியா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையில் காத்திருந்தனர்.இலங்கைக்கு வருகை தந்துள்ள இவர்கள் இங்கு 05 நாட்கள் தங்கியிருக்கவுள்ளனர்.