உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஊழல் குற்றச்சாட்டு: வலுசக்தி அமைச்சர் தானாகவே பதவி விலக வேண்டும் – நாமல் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னிட்டு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கும் வரை காத்திருக்காமல் அவர் தானாகவே பதவி விலக வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, அரசாங்கமே முறைகேடுகள் இடம்பெற்றதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


மேலும், குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் மூலம் ஏற்படும் நட்டத்தை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.ஆளுங்கட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு ஊழல் தொடர்பில்லை என முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது வலுசக்தி அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அந்தக் கூற்றுகளுக்கு முரணானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசியல் சக்திகள் நாட்டின் அரசியல் தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.


மூத்த தலைவர்களை புறக்கணிப்பது தவறு என்றும், புதிய தலைமுறைகள் உருவாக அனுபவமிக்க தலைவர்களின் வழிகாட்டல் அவசியம் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.கடந்த தவறுகளை திருத்தி, நவீன அணுகுமுறையுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

29 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0