உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஜூலை 28 வரை ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

யாழ்ப்பாணம் மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கை எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்தப் புதைகுழி விவகாரம் தீவகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.இந்தச் சம்பவம் தொடர்பாக, தனது மகனை இழந்த 81 வயதுடைய ஸ்டீபன் மரில்டா மற்றும் தீவக முன்னேற்றக் கழகத் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இன்றைய விசாரணையின் போது, பொலிஸார் தரப்பிலிருந்து சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட தரப்பும் காணாமற்போனோர் அலுவலகத்தினரின் பிரதிநிதிகளும் முன்னிலையாகினர்.முன்னதாக, புதைகுழி அகழ்வுப் பணிக்கான வசதிகள் இல்லை என பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தது.


இந்நிலையில், சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு மீண்டும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

2 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0