உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மின்கட்டண உயர்வு, பொருளாதார நெருக்கடி குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் அவசர ஆலோசனை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஆராய்வதற்காக, கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று கொழும்பு நாராஹேன்பிட்டியவில் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.


இந்தக் கலந்துரையாடலில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக மின்உற்பத்தி மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனைத் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது.


மேலும், எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.அத்துடன், “தரமற்ற நிலக்கரி” தொடர்பான கருத்தரங்கு தொடர்களை மாத்தறை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தச் சந்திப்பில் நிமல் சிறிபால டி சில்வா, பாடலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.இதேவேளை, மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் விசேட ஊடக சந்திப்பு நாளை நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

2 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0