உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


அசங்க எஸ். போதராகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், சந்தேகநபருக்கு தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டதுடன், வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் 9 ஆம் திகதி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கச் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.2015 முதல் 2026 வரை வருமானத்திற்குப் புறம்பாகச் சேர்த்ததாகக் கூறப்படும் சொத்துகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில், குடும்பத்துடன் பல முறை வெளிநாட்டு பயணங்கள், மனைவியின் வங்கிக்கணக்குகளில் கோடிக்கணக்கான பணம் இருப்பது மற்றும் கோடிக்கணக்கான பெறுமதியுள்ள வணிக முயற்சி ஆகியவை அடங்கும்.


இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அவரை மேலும் விளக்கமறியலில் வைக்க கோரிக்கை விடுத்திருந்தபோதிலும், பாதுகாப்பு தரப்பின் பிணைக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்க உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

2 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0