தம்புள்ளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர், தமக்குக் கிடைத்த பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 2 இலட்சத்து 13 ஆயிரத்து 780 ரூபாய் பணத்தை பொலிஸாரின் உதவியுடன் அதன் உரியவரிடம் ஒப்படைத்து நேர்மைக்கான முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.
உத்தியோகத்தர் துஷார ஜயவர்தன, தம்புள்ளை நகரில் பொருட்கள் வாங்கிச் சென்ற பின்னர் வீட்டில் பார்த்தபோது அடையாளம் தெரியாத பையில் பெருமளவு பணம் இருப்பதை கவனித்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்து முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகளின் மூலம், அந்தப் பணம் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலின் பொருளாளருக்குச் சொந்தமானதுஎன கண்டறியப்பட்டது.புனித ரமழான் மாதத்திற்காக சேகரிக்கப்பட்ட நன்கொடையாக இருந்த அந்தத் தொகை, பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த நேர்மையான செயல் பொதுமக்களிடமும் பொலிஸாரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
Related Posts
போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!
அனுராதபுரம், விஜேபுர பகுதியில் 5 கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் அனுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!
இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த...
டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!
டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது. இன்று (09)...
திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்
சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும்...
சிறைச்சாலைக் கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு கொ*லை மிரட்டல்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறை வாசலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட...
ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...
பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!
மன்னாரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் , அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம்...
ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்கவே சிறைச்சாலைக் குழப்பங்கள் – அருள் ஜெயந்திரன் சந்தேகம்!
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடிகளை மூடிமறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சிறைச்சாலை குழப்பங்களும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவோ என்ற...
13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!
எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த அவர்கள் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று (08.07.2026)...
திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை...










