உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சமன் ஏக்கநாயக்க பிணையில் விடுவிப்பு – கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்க்ரமசிங்க அவர்களின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவின் படி, தலா 2 மில்லியன் ரூபா மதிப்புடைய இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க வேண்டும் என நீதிவான் இசுரு நெத்திகுமார அறிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்க்ரமசிங்க அவர்களுக்கு எதிரான பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


2023 ஆம் ஆண்டு, ரணில் விக்க்ரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரிட்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்திற்கு 16.2 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.விசாரணையின் போது சமன் ஏக்கநாயக்கவின் சார்பில் முன்னிலையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ பிணை கோரிக்கையை முன்வைத்தார். நீதிவான் அதை ஏற்றுக்கொண்டு நிபந்தனையுடன் பிணையை வழங்கினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0