உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கிளிநொச்சியில் கொலை சம்பந்தமான வழக்கில் நபர் ஒருவருக்கு மேல் நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை..!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

கிளிநொச்சி மேல் நீதிமன்றம், கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டமை குற்றங்களில் தொடர்புடைய நபருக்கு ஐந்து ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


இந்த வழக்கு சம்பந்தமாக, 2022 மே மாதம் 8ஆம் திகதி, முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் குற்றவாளி ஒருவர் ஓட்டோ சாரதியை கத்திமுனையில் அச்சுறுத்தி அவரது ஓட்டோவை கடத்தியிருந்தார். இதனையடுத்து, பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்து, ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை ஓட்டோவால் மோதி படுகாயம் ஏற்படுத்தியிருந்தார்.

குற்றவாளி கைது செய்யப்பட்டு வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.நேற்று, நீதிமன்ற நீதிபதி ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டு, குறித்த நபருக்கு ஐந்து ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 3,50,000 ரூபா மற்றும் மற்றையவருக்கு 5,00,000 ரூபா இழப்பீடு செலுத்தப்பட வேண்டிய கட்டளை விதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படாவிட்டால், முறையே ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடங்கள் கூடுதல் சிறைத் தண்டனையாக அமையும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0