உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாந்தை கிழக்கில் பாலங்கள் அமைக்க அவசர முயற்சி – ஆளுநர் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் துண்டிப்பு மற்றும் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கும் வகையில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், அவற்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இடரால் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை பார்வையிடும் நோக்கில், ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று (18.02.2026) காலை நேரடி களப்பயணம் மேற்கொண்டனர்.மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் துண்டிப்பு மற்றும் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கும் வகையில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், அவற்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இடரால் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை பார்வையிடும் நோக்கில், ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று (18.02.2026) காலை நேரடி களப்பயணம் மேற்கொண்டனர்.பாண்டியன்குளம் – செல்வபுரம் பகுதியில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக விவசாயிகளால் கைவிடப்பட்டிருந்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தை ஆளுநர் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

விவசாயிகள் சம்மதம் அளித்தால், இலங்கை மின்சார சபைக்கு மின்சாரம் விற்பனை செய்யாத சூரியக்கலத் திட்டம் மூலம் திட்டத்தை மீள இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் பேசி இறுதி முடிவை அறிவிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.வன்னிவிளாங்குளம் – பனங்காமம்பற்று வீதியில் மூன்று இடங்களில் பாலங்கள் இல்லாததால் மழைக்காலங்களில் மாந்தை கிழக்கு பிரதேசம் முழுமையாகத் தனிமைப்படும் அபாயம் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த இடங்களை நேரில் ஆய்வு செய்த ஆளுநர், நீர்ப்பாசனத் திணைக்களமும் வீதி அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து மதிப்பீடு அறிக்கை தயாரிக்குமாறு உத்தரவிட்டார்.மேலும், புளியங்குளம் – குமரிக்குளம் வாய்க்காலில் செல்வபுரம் காட்டுக்கரை வீதியிலுள்ள பாலத்தை விரிவுபடுத்துவது மற்றும் வெள்ளநீர் மேவிப் பாயும் இடங்களில் புதிய பாலங்கள் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப ஆய்வு செய்து சாத்தியப்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தினார்.

நட்டாங்கண்டல் பிரதேச மருத்துவமனை மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையைப் பார்வையிட்ட ஆளுநர், சேதமடைந்த விடுதிகளை உடனடியாகச் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீள திறக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
பாண்டியன்குளத்தில் இந்தியா அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட முன்னோடி வீட்டுத் திட்டத்தில் பல வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுவதை கவனத்தில் கொண்டு, உரிய தரப்பினருடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

இக்களப்பயணத்திற்குப் பின்னர் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் பொதுமக்களின் குறைகேள் சந்திப்பும் நடைபெற்றது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

43 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0