போதைப்பொருள் சுற்றிவளைப்பு; பலர் கைது.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (3) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, 930 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 377 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 84413 கஞ்சா செடிகளும், 04 கிலோ 142 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 529 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 001 கிராம் குஷ் போதைப்பொருளும், 066 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 342 போதை மாத்திரைகளும், 69 கிலோ 489 கிராம் மதனமோதக மாத்திரைகளும், 437 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 07 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.