புதையல் தோண்டிய ஒருவர் கைது.!
பதுளை – செல்வகந்த பகுதியில், சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேக நபர் ஒருவர் பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நுவரெலியா பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பதுளை குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தியபோது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து அகழ்வாராய்ச்சி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.