சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு.!
78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 49 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், குறித்த கைதிகளுக்கு இந்த ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கைதிகள் நாளை மறுதினம் (04.02.2026) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு, பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.கைதிகள் அனுபவிக்கும் ஒவ்வொரு ஆண்டு சிறைத்தண்டனைக்கும் ஒரு வார (01 வாரம்) மன்னிப்பு வழங்கப்படும்.
ரூபா 75,000 க்கும் குறைவான அபராதம் செலுத்தாததன் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் மீதமுள்ள தண்டனை காலம் இரத்து செய்யப்படும்.