இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – குருநாகல் வீதியில் மேல் கொஸ்வத்த பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹல்மில்லேவ பகுதியை சேர்ந்த 13 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது
வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது சிலாபம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்களும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், யட்டியன்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பிலிங்கஹஹேன பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கித்துல்கல நோக்கிப் பயணித்த உந்துருளி எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, விபத்தில் உந்துருளி ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்து தளிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.