காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு.!
களுத்துறை, அகலவத்தை, திரிவணகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் இன்று (01) காலை கண்டெடுக்கப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திரிவணகெட்டிய தோட்டத்தை சேர்ந்த பி. லெச்சமி (74) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் சேவைக்கு பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, அங்கு சென்றபோது, குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக சந்தேகித்து, பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டுபிடிக்கப்பட்ட உடலுக்கு அருகில் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.