உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கிலிருந்து படைகளை அகற்ற தமிழ் மக்கள் விரும்பவில்லையாம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றுவதற்குத் தமிழர்களுக்கு விருப்பமில்லை. அவை இருப்பதே தமக்குப் பாதுகாப்பு என அவர்கள் கருதுகின்றனர்.” – இவ்வாறு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் அண்மைக்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போதே, வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் இராணுவ முகாம்களைத் தமது பாதுகாப்பாகக் கருதுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தைப்பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுர, தமிழ் மக்களின் மனங்களில் பிரிவினையை விதைத்துள்ளார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் எனக் காண்பிக்க முனைந்துள்ளார்.

தமிழர்களின் வாக்குகள் ஏனைய ஜனாதிபதிகளைவிட, ஜனாதிபதி அநுரவுக்கே அதிகமாகக் கிடைத்தன. எனவே, சிங்கள மக்களைக் காட்டிக் கொடுத்தாவது வடக்கைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அநுர எண்ணுகின்றார்.

வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, தெற்கிலும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் முகாம்களை அகற்றக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக் காலத்தில் முகாம்களின் எண்ணிக்கையை நாமும் குறைத்தோம். ஆனால், முற்றாக நீக்காமல் தேவையானவற்றைத் தக்கவைத்தோம். ஏனெனில், இராணுவ முகாம்கள் அவசியமானவை.

சில தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தினாலும் வடக்கிலிருந்து படைகளை முழுமையாக வெளியேற்ற அங்குள்ள மக்கள் விரும்பவில்லை.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையானளவு படைகள் இருக்க வேண்டும். தேவையானவைதான் வடக்கில் உள்ளன. அவற்றை அகற்றக் கூடாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

46 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

46 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

97 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

65 0 0