சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க நல்லிணக்கம் அவசியம் – அமைச்சர் சந்தன அபேரத்ன கருத்து.!
இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் முழு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்ற நிலையில், உள்ளூராட்சி அமைச்சர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:
“உண்மையான சுதந்திரத்தைக் கட்டியெழுப்ப நிலையான சமாதானம் அவசியம். இதற்காக இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது. நாட்டில் மீண்டும் இனவாத மோதல்கள் இடம்பெற இடமளிக்கமாட்டோம். தேசிய சமத்துவம் கட்டியெழுப்பப்படும். உண்மையான சுதந்திரம் நிலைநிறுத்தப்படும். சிறந்த நாடையும் வளமான பொருளாதாரத்தையும் உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.”