உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று காலை 10.30 மணிக்கு நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட லக்சபான பிரிவில் இடம்பெற்றுள்ளது.

லக்சபான தோட்ட லக்சபான பிரிவில் உள்ள தொழிலாளர்கள் இன்று காலை பணிக்கு சென்ற வேளையில் மரணித்த நிலையில் கருப்பு நிற சிறுத்தை ஒன்று கிடைப்பதை கண்ட தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தனர்.

முகாமையாளர் இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

உடன் நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரணித்த நிலையில் இருந்த கறுப்பு நிற சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த சிறுத்தை மரணித்து மூன்று நாட்கள் ஆகி விட்டது எனவும் என்ன காரணமாக மரணித்தது என்று தெரியவில்லை என்று நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

55 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

61 0 0