பருத்தித்துறை பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் பரபரப்பு..!
பிராஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையால் சபை அமர்வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 10 வாக்குகள் ஆதரவாகவும், 5 வாக்குகள் நடுநிலமையாகவும், 4 வாக்குகள் எதிராகவும் அளித்ததுடன் ஒருவர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச சபை அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 9:45 மணியளவில் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இதில் தேசிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி திட்டத்தை எதிர்ப்பதென்று தவிசாளரால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 10 ஆதரவு வாக்குகளும், 4 எதிரான வாக்குகளும், நடுநிலையாக 5 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்த நிலையில் பிரேரணை நிறைவேறியது.
அதனை தொடர்ந்து குடத்தனையில் வரவேற்பு வளைவு கேட்டதற்கான கோரிக்கை விவாதிக்கப்பட்டு அதன் எல்லைப்படுத்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சபையின் குழு ஒன்று ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
மணல்காடு சமூக காடாக காணப்படும் சவுக்கம் காட்டினை சுற்றுலா நோக்கங்களுக்காக பருத்தித்துறை பிரதேச சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை உரிய தரப்பிற்கு அனுப்பி உரிய சமூக காடான சவுக்கம் காட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பது என்றும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
