பற்றைக்கு தீ வைத்த விஷமிகள்; வனப்பகுதி தீயில் எரிந்து நாசம்.!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் கரையோர பகுதியில் மாணாபுள் பற்றைக்கு இன்று காலை 11.45 அளவில் விஷமிகள் தீ வைத்துள்ளனர்.
இதன் காரணமாக சுமார் 10 ஹெக்டையார் மாணாபுள்ளுடன் சேர்ந்து உள்ள டேப்பன்டைன் வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமானது.
இப் பகுதியில் தற்போது கடுமையான உஷ்ணம் நிலவிவரும் வேளையில் இந்த தீயினால் வனஜீவராசிகள் மற்றும் நீர் ஊற்றூக்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத் தீ குறித்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
