திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.