கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினர் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பொங்கல் விழா.!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கைதிற்கு பின்னர், கருணா மற்றும் அக்கட்சியின் பிற பிரதிநிதிகள் பெரிதாக பொதுநிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை.அப்படியே கலந்து கொண்டிருந்தாலும், அவை அவ்வளவு பிரம்மாண்டமானதாகவோ அல்லது முக்கியமானதாகவோ இருந்திருக்கவில்லை.
இந்நிலையில், அண்மையில், கருணா, பிள்ளையான் தரப்பினர் உருவாக்கியிருந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா இடம்பெற்றிருந்தது.அதேநேரம், இந்நிகழ்வின் போது கருணா வெளியிட்டுள்ள கருத்துக்கள், மீண்டும் அவர்களின் அரசியல் கூட்டமைப்பு உருவாகுமா என்னும் கேள்வியை தூண்டும் வகையில் உள்ளது.