படு கொ*லை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்த போராட்டம்..!
படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக நீதியை கோரி, மட்டக்களப்பில் இன்று (27) மாலை தீப்பந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரி நிகழ்வின் பகுதியாக, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள நினைவுத்தூபி அருகே முன்னெடுக்கப்பட்டது.
மட்டுமொழி ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியாளர் ஒன்றியம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து இதை ஏற்பாடு செய்தனர்.மட்டுமொழி ஊடக அமையத்தின் தலைவர் வா. கிருஷ்ணகுமார் தலைமையில் போராட்டம் தொடங்க, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரி சுடர் ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, நீதியை கோரி தீப்பந்தம் ஏற்றி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்ட இடத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டத்தின் போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்குக, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியாளர் எங்கே?, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துக என பல கோசங்கள் எழுப்பப்பட்டன.
நாட்டின் உள்ளக பொறிமுறையில் ஊடகவியலாளர்கள் நம்பிக்கையிழந்ததையொட்டி, சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் இலங்கையில் சம்பவங்களை விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


