அஸ்வெசும தை மாத நிதியுதவி நாளை பயனாளிகளின் வங்கி கணக்குகளில்.!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற பயனாளிகளுக்கான தை மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான தை மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி , முதலாம் கட்டத்தின் கீழ் உள்ள 14 இலட்சத்து 15 ஆயிரத்து 584 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தமாக ரூபாய் 11,234,713,750 வங்கி கணக்குகளில் செலுத்தப்படவுள்ளது.மேலும்,
முதலாம் கட்டத்தின் கீழான தை மாத முதியோர் கொடுப்பனவாக 6 இலட்சத்து 18 ஆயிரத்து 440 பயனாளிகளுக்கு ரூபாய் 3,092,200,000 வழங்கப்படவுள்ளது.
அத்துடன்,
இரண்டாம் கட்டத்தின் கீழ் தை மாதக் கொடுப்பனவாக 2 இலட்சத்து 48 ஆயிரத்து 454 பயனாளி குடும்பங்களுக்கு ரூபாய் 2,235,137,500 வங்கி கணக்குகளில் செலுத்தப்படவுள்ளது.
மேலும்,இரண்டாம் கட்டத்தின் கீழான தை மாத முதியோர் கொடுப்பனவாக 68 ஆயிரத்து 183 பயனாளிகளுக்கு ரூபாய் 340,915,000 வழங்கப்படவுள்ளது.