உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி முத்துக்குமாரசாமிக்கு நினைவேந்தல்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

ஈழ விடுதலைப் போராட்டங்களில் முன்னோடியாகவும், சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து அண்மையில் மறைந்த தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில், கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவு நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி அ. அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், கோவிந்தன் கருணாகரம், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி திருமதி செல்வராணி, திருகோணமலை மாவட்டத் தலைவி தேவி ஆகியோர் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியால் அமரர் தம்பித்துரை முத்துக்குமாரசாமியின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சங்க உறுப்பினர்களால் பொதுச் சுடர் மற்றும் ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கங்களால் தயாரிக்கப்பட்ட நினைவு அறிக்கை மட்டக்களப்பு மாவட்டத் தலைவியால் வாசிக்கப்பட்டதுடன், நினைவு உரைகளும் இடம்பெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

31 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0