உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பரந்தன் இரசாயன தொழிற்சாலை மீள் உருவாக்கம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதாரத் தூணாகக் கருதப்படும் பரந்தன் இரசாயன நிறுவனம் மீண்டும் தனது செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளது.1985 ஆம் ஆண்டு நிலவிய யுத்தச் சூழ்நிலை காரணமாக முழுமையாகச் சேதமடைந்திருந்த இந்தத் தொழிற்சாலை, தற்போது அரசின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ளது.இந்தத் திட்டத்தின் மிக முக்கிய கட்டமான உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் 2026 ஜனவரி 21 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பரந்தனில் அமைந்துள்ள தொழிற்சாலை வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளன.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் இந்த ஆரம்ப நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.இத்தொழிற்சாலையின் மீள்வருகையானது வட மாகாணத்தின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அப்பகுதி இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0