உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சட்டமா அதிபரின் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

சட்டமா அதிபரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் எவ்வித தேவையற்ற தலையீடுகளும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும் சட்ட அமுலாக்க நிறுவனங்களது கடமையாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் சட்டமா அதிபரைக் குறிவைத்து வெளியிடப்பட்டு வரும் பதிவுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம் மிக அவசியமானது.

இதனைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சமூக ஊடகங்களில் பகிரப்படும் இத்தகைய பதிவுகள், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கான ஒரு நியாயமற்ற முயற்சி என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.சட்டமா அதிபரின் பணிகள் குறித்து அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குற்றவியல் விவகாரங்களில் சட்டமா அதிபர் ஒரு நீதித்துறை சார்ந்த பணியையே ஆற்றுகிறார்.

புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில், ஒரு சந்தேக நபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என்பதை அவர் தீர்மானிக்கிறார்.இந்தச் செயல்முறையின் போது, அந்த ஆதாரங்கள் சட்டப்பூர்வமானவையா மற்றும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமானவையா என்பதை அவர் மதிப்பீடு செய்கிறார்.

சட்டமா அதிபரின் முடிவுகள் இறுதியானவை அல்ல. அவை நீதிமன்றத்தில் எழுத்தாணை (Writ) மனுக்கள் மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை (Fundamental Rights) மீறல் மனுக்கள் மூலமாகவோ நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் எனச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நீதி மற்றும் சுதந்திரத்தின் கொள்கைகளை நிலைநாட்ட, எவ்வித வெளிப்புற அழுத்தங்களும் இன்றி சட்டமா அதிபர் அலுவலகம் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0