உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளியை மோதிவிட்டு தப்பிச் சென்ற சிற்றூந்து.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இன்று(20) முற்பகல் 11.00 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இயக்கச்சி பகுதியில் இருந்து இயக்கச்சி சந்திநோக்கி பயணித்த மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிற்றூந்து வாகனம் பின்னால் வந்து மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இயக்கச்சி பகுதியை சேர்ந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் இடத்திற்கு வருகை தந்த பளை போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தை அருகில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காண முயற்சித்துவருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0