உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மன்னார்–வில்பத்து–புத்தளம் பிரதான வீதி திறப்பில் அதிகாரிகளின் அலட்சியம் – சிவில் அமைப்புகள் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மன்னாரிலிருந்து வில்பத்து வழியாக புத்தளம் செல்லும் பிரதான வீதி தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ள போதிலும், பொறுப்பான அதிகாரிகளின் அலட்சியத்தால் வீதி திறப்பு நடவடிக்கை தாமதமாகி வருவதாக சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக இன்றைய தினம் (17) மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதிநிதிகள், 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூடப்பட்டுள்ள குறித்த வீதி பொதுமக்களின் போக்குவரத்து தேவைக்காக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

மாற்றுப் பாதையில் அதிக தூரமும் நேரமும் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த வீதி திறக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து சிரமங்கள் குறைந்து பொருளாதார நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.எனவே, மன்னார்–வில்பத்து–புத்தளம் பிரதான வீதியை மீண்டும் திறந்து பொதுமக்களின் இலகுவான போக்குவரத்திற்கு வழிவகுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

46 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

19 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

37 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

44 0 0