போதைப்பொருட்களுடன் சிக்கிய இருவர்.!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொடகம – பாலட்டுவ வீதியில் காரில் போதைப்பொருள் கடத்திய இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சோதனையில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 6 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.