பெண்களை அந்தரங்கமாக காணொளி பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் நபர்.!
பெண்கள் உடை மாற்றுவது மற்றும் குளியலறைகளில் குளிப்பதனை வீடியோவாக எடுத்து கப்பமாக பணம் பெற்று வந்த நபர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவை பகுதியை சேர்ந்த சந்தேக நபரான கனிஷ்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌசல்ய இன்று பிறப்பித்துள்ளார்.நீர்கொழும்பு மற்றும் பொல்கஹவெல நீதிமன்றங்களில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.