தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு.!
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு செவ்வாய்க்கிழமை (13.01.2026) பிற்பகல் 3.00 மணிக்கு நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வுரையரங்கில் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் அரசறிவியற் துறையின் முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பேசுபொருளாக உள்ள விடயங்கள் தொடர்பாக சமகால அரசியல் உரையரங்கு என்ற நிகழ்ச்சியை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.