கோடாவுடன் ஒருவர் கைது.!
தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகெந்த பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (10) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கோனவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சிலாபம் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 1,620 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.