ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதல்! முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்!
முல்லைத்தீவு-ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று (09.01.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவில் இருந்து ஒட்டிசுட்டான் ஊடாக வவுனியா நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த முச்சக்கரவண்டியில் இருவர் பயணித்திருந்த நிலையில், திடீரென வீதிக்கு குறுக்காக வந்த யானை தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலின் காரணமாக முச்சக்கரவண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதுடன், வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.