முத்தையன்கட்டுக் குளம் தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய தகவலையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (14) குறித்த இடத்திற்கு நேரடியாக கள விஜயமொன்றினை மேற்கொண்டு நிலைமைகள் குறித்து பார்வையிட்டார்.
அத்தோடு வடமாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், நீர்பாசனப் பொறியியலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது முத்தையன்கட்டுக் குளம் உடைப்பெடுக்கும் அபாயத்திலிருப்பது தொடர்பாக வெளியான செய்திகளில் உண்மைத் தன்மைகள் இல்லை எனத் தெரிவித்த பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முத்தையன்கட்டுக் குளத்தின் நீரை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













