35 மில்லியன் ரூபாய் நிதி மோசடி; அரச பொறியியலாளருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
வவுனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து 3.5 கோடி (35 மில்லியன்) ரூபாய் பணத்தைப் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் பொறியியலாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.