புதையல் தோண்டிய ஒருவர் கைது.!
பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலகஸ்தன்ன பகுதியில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மயிலகஸ்தன்ன பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஆவார்.
பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று வெள்ளிக்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.