உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

டெங்கு மரணங்களுக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும் – மொட்டுக் கட்சி சாடல்!

இலங்கை செய்திகள் 24 மணி நேரம் முன்
78 பார்வைகள்

நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும், அரசு அதனைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது, அரசியல் பிரசாரங்களிலேயே கவனம் செலுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்  சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த வருடத்தில் இதுவரை 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று கூட 16 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரசின் ‘ க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. இதில் வீதிப் பயனாளிகளின் வாகனங்களைச் சோதனையிடுவதும், அரச நிறுவனங்களுக்குள் தமது ஆதரவாளர்களை உள்வாங்குவதுமே நடக்கிறதே தவிர, நாடு சுத்தப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான அலட்சியப்போக்கினால் நிகழும் ஒவ்வொரு மரணத்திற்கும் அரசே பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றார்.

நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மர்ம மரணங்கள் குறித்து கடும் சந்தேகத்தை வெளியிட்ட அவர், சில உயிரிழப்புகள் தற்கொலை என முன்னரே அறிவிக்கப்படுவது விந்தையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“323 கொள்கலன் திருட்டு விவகாரத்தில் முறைப்பாடு செய்த நபர், நந்தன குணதிலக, கபில சந்திரசேன, திறைசேரி அதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் எனப் பலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து செய்தி வருவதற்கு முன்பே, அது தற்கொலை எனப் பொலிஸ் அதிகாரி ஒருவர் அறிவித்தமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மர்மமாக இறப்பதும், பின்னர் அவை தற்கொலை எனப் பிரச்சாரம் செய்யப்படுவதும் ஜனநாயகத்துக்குப் பொருத்தமற்றது.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு டெங்கு மற்றும் கோவிட் நோயைக் கட்டுப்படுத்திய அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளைப் பெறாது, தனது அகந்தையுடன் செயற்படுகின்றது என்று  தெரிவித்த சாகர காரியவசம், இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசு ஏன் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கின்றது என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதும் என்றும் கூறினார்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் தள்ளிவிட்டு, மக்களின் உயிரைக் காக்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் ஆஸ்திரேலிய அமைப்பு!

யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஆஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

மயிலிட்டி துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை அகற்றுக.!

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை ஏற்படுத்துமாறும்…

49 0 0
இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20)…

51 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில்…

50 0 0