நயினாமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!
ஆயிரம் குள வேலைத்திட்டத்தின் கீழ் நயினாமடு குளத்தின் புனர்நிர்மாண வேலைகள் நேற்று அமைச்சர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் நயினாமடு கிராம சேவகர் பிரிவில் நயினாமடு குளம் ஜனாதிபதியின் செயற்திட்டத்திற்கு அமைவாக ஆயிரம் குள வேலைத்திட்டத்தில் இக்குளம் தெரிந்து எடுக்கப்பட்டு அதன் புனர்நிர்மாண வேலைகளை கௌரவ R.H உபாலி சமரசிங்க அவர்கள் வைபவ ரீதியாக புனர்நிர்மாண வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்போது இந்த பகுதியுள்ள விவசாயிகள் இரண்டு போக நெற்செய்கையினையும் அதிகளவு செய்கை பண்ண முடியும். அந்த அடிப்படையில் நேற்றைய தினம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் B.A சரத்சந்ரா அவர்களும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் M.ஜெகதீஸ்வரன், T. திலகநாதன் மேலதிக அரசாங்க அதிபர் கமநல உத்தியோகத்தர் பிரதேச சபை உறுப்பினர் M. அகிலன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





