உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வடமாகாண கரம் போட்டியில் வேலணை மத்தியின் மாணவி விதுர்ஷினி சம்பியன்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று குழு போட்டியிலும் கலந்துகொண்டு வடமாகாண அணிக்கு தனது திறமையை வெளிப்படுத்தி அணி சம்பியன்னாவதற்கும் பங்காற்றியுள்ளார்.

முன்பதாக கடந்த 18.04.2026 நடைபெற்ற மாவட்ட மட்ட கரம் போட்டியில் வேலணை பிரதேச செயலகம் சார்பில் கலந்து கொண்டு மாவட்டமட்ட போட்டியில் வெற்றி பெற்று யாழ் மாவட்ட அணியில் இடம் பிடித்திருந்த ஜெ.விதுர்ஷினி, நேற்றையதினம் (13.06.2026) யாழ் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாணமட்ட போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் நடைபெறவிருக்கும் தேசிய மட்ட போட்டியில் வடமாகாணம் சார்பாக கலந்து கொள்ளவுள்ளார்.

இவ் வெற்றியானது யா/ வேலணை மத்திய கல்லூரிக்கும், வேலணை பிரதேசத்திற்கும், தீவக மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

இதேவேளை கரம் போட்டியில் தீவக மண்ணை சார்ந்த வீரரொருவர் வடமாகாண அணியில் பங்கோற்று தேசியமட்ட போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும்.

பாடசாலையின் முதல்வர் இ.ஹஸ்ரன் றோய் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அ. றொ. அனோஜன் ஆகியோர் குறித்த மாணவியின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0