உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தொலைத்தொடர்பு கோபுர கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
13 பார்வைகள்

ராகம பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துபஸ்வல மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய அதிகாரிகள் குழுவினால் நேற்று சனிக்கிழமை (13) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது குறித்த நபர்களிடமிருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

கைதான நபர்கள் சுமார் 922,750 ரூபாய் பெறுமதியான தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், திருடப்பட்ட பெருமளவிலான கேபிள் துண்டுகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, மொரட்டுவை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடியமை மற்றும் பல்வேறு வீடடைப்பு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழமை (13) பிற்பகல் குற்றத்தடுப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போதே, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் மொரட்டுவை பகுதியில் சுமார் 180,000 ரூபா பெறுமதியான தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள் கம்பிகளை திருடியுள்ளதுடன் பல வீடுகளினுள் புகுந்து பெறுமதியான சொத்துக்களையும் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பெருமளவிலான செப்பு கம்பிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

41 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

34 0 0