உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தொழிலாளர்களிடம் அதிக கொழுந்து பறிக்குமாறு உத்தரவு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் ஆண்களுக்கு 3 கிலோ அதிகமாகவும், பெண்களுக்கு 1 கிலோ அதிகமாகவும் பச்சை கொழுந்து பறித்து கொடுக்க வேண்டும் என கூறி கடந்த மே மாதம் பணிபுரிந்த வேதனத்தில் தோட்ட நிர்வாகத்தால் அறவிடப்பட்ட பணத்தை மீண்டும் வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கத்திடம் முறையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மஸ்கெலியா மாவட்ட பிரதிநிதி திரு.கணகராஜ் சம்பந்தப்பட்ட தனியார் தோட்ட அதிகாரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி எவ்விதமான அறவீடும் இன்றி கடந்த மாதம் பணி புரிந்த நாட்களுக்கான வேதனத்தை கட்சி பேதமின்றி அனைவருக்கும் பெற்று கொடுத்தார்.

அத்துடன் அதிக அளவு கொழுந்து பறிபதற்கான காரணத்தை ஹட்டன் தொழில் ஆணையாளர் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

நேற்று 10 ஆம் திகதி தொழில் ஆணையாளர் முன் நிலையில் இப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டது.

இந்த தனியார் தோட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு 1550/= ரூபாய் வேதனம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் வழங்கும் 200/= ரூபாய் வழங்கப்படுவது இல்லை என அத் தோட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தால் பொறுப்பேற்று அதனை கம்பெனி தோட்டங்களாக நிர்வாகம் செய்து வரும் அனைத்து தோட்டங்களிலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் 200/=கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட போதிலும் தனியார் தோட்டங்களில் பணி புரிந்து வரும் தொழிலாளர்களுக்கு அந்த 200/= கிடைப்பது இல்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

28 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0