சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதொட்டமுல்ல பகுதியில் நேற்று புதன்கிழமை (10), வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 90 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மதுபானம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லம்பிட்டிய பொலிஸார் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.